ஸ்டாலின் கொடுத்த அடுத்த அடி! பரவும் ஆதரவு மிரளும் மோடி!

3 hours ago
ARTICLE AD BOX

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற ஆபத்தான சூழலை அனைத்துக் கட்சிகளும் ஒரேவிதாக பார்த்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய நேர்மையான சேவையாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் ஜென்ராம் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- உத்தர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் நீங்கள் எவ்வளவு முற்போக்கான விஷயங்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுபோக முயற்சி செய்தாலும், அவர்களுடைய மிருக பலத்தால் தடுப்பார்கள். பாஜகதான் அங்கே ஜெயிக்குமா? அதனால் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன? காங்கிரஸ் ஜெயித்தால் உங்களுக்கு நல்லது தானே என சிலர் லாலிபாப் கொடுப்பார்கள். இது காங்கிரஸ் ஆளுகிறதா? பாஜக ஆளுகிறதா? சமாஜ்வாதி ஆளுகிறதா? திமுக ஆளுகிறதா? என்பது பிரச்சினையே கிடையாது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இந்திய நாடாளுமன்றத்தில் என்ன என்பது தான் முக்கியம்.

வளர்ச்சிக்கு தமிழ்நாடு என்ன பங்களிப்பு செய்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான சூழலை மாநில அரசுகள் ஏற்படுத்தி இருக்கின்றன?. அப்படி முன்னேறிய நிலையில் வரக்கூடிய மாநிலங்களுக்கு, இந்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாக உள்ளது என்கிற சூழலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. அது இந்திய ஜனநாயகம் என்கிற பெயரில் அப்படி ஒரு நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய கவலை தரும் கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால் இதை எதையுமே சட்டை செய்யாமல் நீங்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளீர்கள். நாங்கள் ஆட்சி செய்கிறோம். அதனால் மீண்டும் தேர்தலில் வந்து உங்கள்கிட்ட வாக்கு கேட்கும் வரை உங்கள் சார்பாக நாங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை பாஜகவினர் முன்னெடுக்கிறார்கள். அப்படித்தான் இதையும் அணுகிறார்கள் என்றால் அது இரு தரப்புக்கும் இடையில் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவிடும் என்கிற கவலை உள்ளது.

tamilnadu assembly

31 ஆக தமிழ்நாட்டு எம்.பிக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், அனைத்து மாநிலங்களுக்கும் இடையில் ஓரளவு வித்தியாசத்தோடு ஆவது, ஒரு சமத்துவம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையில் சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பின் அது பரவாயில்லை. தமிழ்நாட்டிற்கு 40, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 45 முதல் 50 இடங்கள் வந்தால் பரவாயில்லை. ஆனால் இப்போதே 80 என்றுதான் உள்ளது. 543 இடங்கள் என்கிற இந்த சமனிலையையாவது உறுதி செய்யுங்கள். அதற்கு தகுந்தாற்போல் தொகுதிககு எவ்வளவு மக்கள் இருக்க வேண்டும் என்று கணக்கு செய்கிறீர்களோ? அதை அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

2026க்கு பிறகான முதல் மக்கள்த் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகள் will be Readjusted, will be Redistributed என்றுதான் சொல்கிறார்கள். இதற்கு நாம் எந்த வரையறை வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ள முடியும். Redistribution என்பது வளர்ந்தவர்களுக்கு தண்டனையாக மாறிவிடக் கூடாது என்பதை அடிப்படை கோட்பாடாக வைத்துக்கொண்டு இந்த முன்மொழிவை பரிசீலித்தால் அது சரியாக இருக்கும். அப்படி செய்வார்களா? என்பது சந்தேகம். ஆனால் இந்த பிரச்சினையை இப்படியே கொண்டு சென்றால் தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள்.  543ல் தற்போது 40 தொகுதிகள் உள்ளன. அது இத்தனை சதவிகிதம் உள்ளது. அப்போது, 848ல் 31 அல்லது 40 என்பது என்ன சதவீதம் உள்ளது?. அப்படி என்றால் தமிழநாட்டிறகு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் என்ன?

இது திராவிட அரசியலோ, தமிழ்தேசிய அரசியலோ என்று பேசி கொண்டிருக்க நேரம் இல்லை. திமுக – அதிமுக வேறுபாடுகளை வைத்துக்கொண்டு பேசவோ, கொண்டாடவே நேரம் இல்லை. புதிதாக அரசியல் கட்சிகளை இன்றுதான் தொடங்கியுள்ளளோம். நேற்றே தீர்வுகளை நீங்கள் கண்டிருக்க வேண்டும் என்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடி தந்து விடாதா? என்று கொண்டாடக்கூடிய நேரமும் இது அல்ல. பிரச்சினையும் அது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அந்த கோணத்தில் இந்த கட்சிகளையும் பார்க்க வேண்டும். பிரச்சினையை மத்திய அரசு தீர்ப்பதற்கான தேவையான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.

இந்தியா ஒரே நாடு, ஒரே திட்டம் என்கிற நிலையை நோக்கி நகர்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பண்பை படிப்படியாக மறைய செய்கிற வேலை இதிற்குள் இருக்கிறது என்பதும் வெளிப்படுகிறது. அதுபோக இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்குகிறபோதே இந்த வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அன்று ஆட்சியில் இருந்தவர்கள் மாநிலங்களின் கழுத்தை மிகவும் இறுக்கவில்லை. 1971க்கு பிறகு இதே பிரச்சினை வருகிறபோது இதை 2026ல் பார்த்துக்கொள்ளலாம் என அந்த நிமிஷத்தில்  நம்மை மூச்சுவிட அனுமதித்தனர். இப்போது இந்திய அளவில் பொறுப்பேற்றுள்ள அரசு அதுபோன்ற சலுகைகளை வழங்கத் தயாராக உள்ளதா? அப்படி என்பதுதான் கேள்வி.

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

சட்டம் இதை சொல்கிறது. மக்கள் இதைதான் செய்ய வேண்டும் என்றும் ரூல் ஆஃப் லா என்பதற்கு பதிலாக ரூல் பை லா- ஆக ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அடிப்படையில் இந்த பிரச்சினைகள் இருந்தாலும் முந்தைய ஆட்சியாளர்கள் சுவாசிப்பதற்கான இடத்தை கொடுத்தார்கள். யாருக்கும் மூச்சு அடைக்கவில்லை. இப்போது நடக்கூடிய விஷயங்கள் எல்லோரையும் சுவரோடு சேர்த்துவைத்து அழுத்துவது போல நடக்கிறது. சிறிது சிறிதாக ஜனநாயக வெளியோடு இருந்த அனைத்து சட்டங்களும், சட்டத் திருத்தங்கள் மூலமாக 2014ல் இருந்து 2024ற்குள்ளாக இறுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை எந்த நிமிஷத்திலும் அவர்கள் கையில் எடுக்கலாம். சட்டத்தின் ஊடாகவே மக்களை செயல்பட விடாமல் அடக்கி வைக்கலாம் என்ற ஒரு நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தி விட்டனர். கூட்டாட்சியில் இருக்கக் கூடிய சிக்கல்களை இதுவரை சகித்துக்கொண்ட புரிந்துகொண்ட எல்லோரையும் கூட, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடைமுறையை கொண்டுவந்தால் அமைதியை கெடுக்கும். அதை எளிதாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சூழலை அனைத்துக்கட்சிகளும் ஒரே விதாக பார்த்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய நேர்மையான சேவையாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article