ARTICLE AD BOX
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் மனைவியுமான தயாளு அம்மாள் மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் வசித்துவரும் தயாளு அம்மாள் மூப்பு காரணமாக மறதி நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இடையிடையே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
குடும்பத்தினரின் அணுக்கப் பராமரிப்பில் இருந்துவரும் அவருக்கு, இன்று மாலையில் திடிரேன மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கூட்டிச்செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.