மக்களே உஷார்...இந்த 8 உணவுகளை சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்

4 hours ago
ARTICLE AD BOX

உணவுகளை அதிக நேரம் கெட்டுப் போகாமல் பாதுகாக்க, சில சமயங்களில் மீண்டும் சூடாக்கிக்கியோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பிறகு எடுத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. ஆனால், எல்லா உணவுகளும் மீண்டும் சூடுபடுத்தும் போது பாதுகாப்பாக இருக்காது. சில உணவுகளில் இருக்கும் நியூட்ரியன்ஸ் மாற்றமடைந்து, அவை விஷமாக மாறி விடுவதுடன், உடல் நலத்துக்கு பாதிப்பளிப்பதாகவும் உள்ளது. 

மீண்டும் சூடாக்கும் போது விஷமாவது ஏன்?

* ரசாயன மாற்றம் – சில உணவுகள் அதிக வெப்பத்திற்கு உட்பட்டால், அதில் உள்ள புரதம், கார்போஹைட்ரேட் போன்றவை தீங்கு விளைவிக்கும் பொருளாகி விடும்.
* சில உணவுகள் பாக்டீரியாக்கள் உருவாகக்கூடிய தன்மையால், மீண்டும் சூடாக்கும் போது அது உடல் நலத்திற்கு தீங்கானது ஆகும்.
* ஆக்ஸிடேஷன் – சில கொழுப்பு நிறைந்த உணவுகள் மீண்டும் வெப்பம் பெற்றால், அதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பாதிக்கப்படும். 

மீண்டும் சூடாக்கினால் விஷமாகும் 8  உணவுகள் :

1. கோழிக்கறி  :

மீண்டும் வெப்பம் கொடுத்தால், கோழிக்கறியில் உள்ள புரத அமைப்பு முற்றிலும் மாறி, உடலுக்கு கேடு விளைவிக்கும்.  புகைப்படாக, குழம்பாக இருக்கும் கோழி மீண்டும் சூடாக்கக்கூடாது. முழு வெந்த கோழியை குறைந்த வெப்பத்தில் மட்டும் சூடாக்கவும்.  மறுநாள் சாப்பிட வேண்டுமென்றால், பச்சையாக இருக்கும் போதே சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். 

2. அரிசி:

அரிசியில் Bacillus cereus என்ற பாக்டீரியா இருக்கும். இது சாதத்தை வெப்பம் கொடுத்த பிறகு கூட நச்சுக்களாக மாற்றும்.  வீட்டில் சமைத்த சாதத்தை 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். மீண்டும் சூடாக்கினாலும், ஒட்டுமொத்தமாக சூடாக்காமல், சிறுசிறு அளவாக மட்டுமே சூடாக்கவும்.
நாளைக்கு வைத்து சாப்பிட வேண்டுமென்றால், மாற்று வழிகளை பயன்படுத்தலாம். சாதத்தை உணவாகச் சாப்பிடாமல், தயிர் சாதம் அல்லது புலாவாக மாற்றலாம்.

3. உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை சமைத்து வெளியே வைத்துவிட்டு மீண்டும் சூடாக்கினால், அதில் கிளோஸ்ட்ரிடியம் போடுலினம் (Clostridium botulinum) என்ற நச்சுவாயு உருவாக வாய்ப்பு உள்ளது. மிகவும் அதிகமாக சூடாக்கினால், அதில் உள்ள கார்போஹைட்ரேட் பாகங்கள் உடலுக்கு கேடானதாக மாறும். உருளைக்கிழங்கை அதிக வெப்பத்தில் வறுக்காமல், வேகவைத்து குளிர்ந்த நிலையில் சாப்பிடலாம்.

4. முட்டை :

முட்டையில் இருக்கும் புரதம் அதிக வெப்பத்திற்கு உட்பட்டால், அது நச்சாக மாறும். தோசை, குழம்பு, ஆம்லெட் போன்ற உணவுகளில் பயன்படுத்திய முட்டையை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. முட்டையை அதிகமாக வதக்கி சாப்பிடாமல், மென்மையாக வேகவைத்து உட்கொள்ளலாம்.

5. கீரை வகைகள் :

மீண்டும் சூடுபடுத்தும் போது கீரையில் இருக்கும் நைட்ரேட், நைட்ரைட்டாக மாறி உடல் நலத்துக்கு ஆபத்தாகிறது.  இதன் காரணமாக, சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கீரையை அதிகமாக வேகவைக்காமல் ஒருமுறை மட்டுமே சமைத்து உட்கொள்ள வேண்டும்.

6. காளான் :

காளான் மீண்டும் வெப்பம் கொடுத்தால், அதில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலத்துக்கு தீங்கானதாக மாறும். ஜீரண கோளாறுகளும், உணவு விஷமாவதற்கும் வாய்ப்பு இருக்கும். காளானை மீண்டும் சூடாக்காமல் சூப்பாக அல்லது குளிர்ச்சியாக சாப்பிடலாம்.

7. பாஸ்தா -நூடுல்ஸ் :

மீண்டும் வெப்பம் கொடுத்தால், பாஸ்தாவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில வகை பாக்டீரியாக்கள் (Bacillus Cereus) அதிகமாக உற்பத்தியாகும். குளிர்ந்த நிலையில் புதிதாகவே தயாரித்து சாப்பிடுங்கள்.

8.  இறைச்சி வகைகள் : 

மீன், ஆட்டு இறைச்சி ஆகியவற்றை மீண்டும் சூடாக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதங்கள் நச்சுவாக மாறும். சில வகை கொழுப்புகள், உயர் வெப்பத்தில் அமிலமாக மாறி, உடலுக்கு கேடு விளைவிக்கும். இறைச்சியை மீண்டும் சூடாக்காமல் ஒரே தடவை சமைத்து சாப்பிடுங்கள்.

Read Entire Article