ARTICLE AD BOX
Published : 21 Feb 2025 05:30 AM
Last Updated : 21 Feb 2025 05:30 AM
பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் விசிக எம்எல்ஏ பாலாஜி விடுதலை

சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தம் பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வடமாநிலங்களில் பட்டியலின அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதில் இறந்து போன குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வாண்டு ஏப்.
3-ம் தேதி சென்னை, அண்ணா சாலையில் விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாலாஜி உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயவேல், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
- இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
- “இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால்...” - ஹமாஸ் எச்சரிக்கை
- முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு