தி.மு.க.வில் இணைந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்

3 days ago
ARTICLE AD BOX
கடலூர்

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நெய்வேலி நகரம் சி.பி.எஸ். அண்ணா திடலில் கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஏற்பாட்டில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க. இணைந்தனர்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டம் சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.இராஜேந்திரன் ஏற்பாட்டில் பாமக – அதிமுக – பாஜக – தவெக – தேமுதிக - அமமுக… pic.twitter.com/yxcCVRmzhl

— DMK (@arivalayam) February 21, 2025


Read Entire Article