கர்நாடகா | ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - இரு தென்னாப்பிரிக்க பெண்கள் கைது

19 hours ago
ARTICLE AD BOX
Published on: 
16 Mar 2025, 1:55 pm

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

டில்லியில் இருந்து பெங்களுாருக்கு விமானம் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களுாரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் அவர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அடோனிஸ் ஜபுலைல் (31), அபிகேல் அடோனிஸ் (30) ஆகிய இருவரும் டில்லியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவத்தில் முதன்முதலாக மங்களுார் பகுதியில் 15 கிராம் போதைப் பொருள் விற்பனை செய்ததாக ஹைதர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இரு தென்னாப்பிரிக்க பெண்கள் கைது
மதுரை | ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் கத்துவட்டிக் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் மக்கள்

இதைத் தொடர்ந்து சிசிபி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, பெங்களூரில் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க வழிவகுத்துள்ளது. மேலும், இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் இகேடி பெலோன்வு என்பவர் கைது செய்யப்பட்டு 6.248 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, தென்னாப்பிரிக்க பெண்கள் குறித்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Read Entire Article