ARTICLE AD BOX
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக 68 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது.
காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். மேலும் டெல்லி தேர்தலை, மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆறு மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.