இந்த 5 விஷயங்களை 'மீண்டும்' பண்ணாதீங்க.. லைஃப்ல பண கஷ்டமே இருக்காது!

3 hours ago
ARTICLE AD BOX

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், நமது பொருளாதார பழக்கங்கள் போன்ற பல விஷயங்கள் நமது நிதி திட்டமிடலை பெரிய அளவில் பாதிக்கின்றன. அன்றாட செலவுகளை சமாளிக்க கஷ்டப்படுபவர்கள் தான் நாட்டில் அதிகம். சிறிய குடும்பங்களில் கூட நிலைமை மாறுவதில்லை. பலருக்கு இன்று முக்கிய வேலைக்கு கூடுதலாக ஒரு பகுதி நேர வியாபாரமோ அல்லது கூடுதல் வருமானமோ இருந்தும் இந்த நிலை மாறவில்லை. இதெல்லாம் போக, நல்ல சம்பளம் கிடைத்தும் மாத இறுதியில் பாக்கெட் காலியாகிறதா? சரியாக திட்டமிட்டு சென்றாலும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது. நமது நிதி திட்டமிடலில் ஏற்படும் சிறிய தவறுகளே இதற்குக் காரணம். உங்கள் பொருளாதாரத்தை ஒரு அளவிற்கு மேல் பாதிக்காமல் இருக்க கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே.

உங்கள் வரம்புகள்

வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள் என்று இதை எளிமையாக சொல்லலாம். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். எல்லா துறைகளிலும் ஒரேயடியாக செலவை குறைப்பதை விட, உங்கள் பலவீனமானவற்றை கண்டுபிடித்து செலவை குறைப்பது நல்லது. உதாரணமாக, நீங்கள் ஷாப்பிங் பிரியராக இருந்தால், அதை முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

முதலீடுகள் செய்ய தயங்காதீர்கள்!

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது. நீங்கள் எவ்வளவு சிறிய சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், உங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை கூட தொடர்ந்து முதலீடாக சேமித்து வைக்கவும். ஒரு முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுங்கள். பங்கு, ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், பத்திரங்கள், எஃப்டி, ஆர்டி என பல முதலீட்டு வழிகளில் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுங்கள். சந்தையில் உள்ள ரிஸ்குகளை சரியாக அறிந்து முதலீடு செய்யுங்கள். இதற்கு நிதி நிபுணர்களின் உதவியை நாடலாம்.

கடன் வாங்கும் பழக்கம்

உங்கள் நிதி திட்டமிடலில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. பணத்தை சுழற்றி சுழற்றி வாழும் ஒருவர் நிச்சயமாக நம் அறிமுகத்தில் இருப்பார். இப்படிப்பட்டவர்கள் கூடிய விரைவில் அந்த பழக்கத்தை நிறுத்த வழி தேடுவது தான் தப்பிக்க ஒரே வழி. பொருளாதாரத்தை கொஞ்சம் கவனமாக கையாண்டால், கொஞ்சம் கொஞ்சமாக கடன்களை குறைத்து இந்த சுழற்சியில் இருந்து வெளியே வரலாம்.
 
கண்டிப்பாக எமர்ஜென்சி ஃபண்ட் வேண்டும்

சாதாரண மக்களுக்கான கேள்வி இது, அவசரமாக ஒரே நேரத்தில் கொஞ்சம் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்? மருத்துவ காப்பீடு ஏதோ ஒரு காரணத்தால் உடனடியாக க்ளைம் செய்ய முடியாமலும், ஆனால் உங்கள் நெருங்கிய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? இந்த கேள்விக்கெல்லாம் பதில் எமர்ஜென்சி ஃபண்ட் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது தான். இதுபோன்ற சூழ்நிலைகளை மனதில் வைத்து நாம் ஒதுக்கி வைக்கும் ஒரு தொகை தான் எமர்ஜென்சி ஃபண்ட். உங்கள் மற்ற முதலீடுகளையோ அல்லது சேமிப்பு கணக்குகளில் இருக்கும் பணத்தையோ எமர்ஜென்சி ஃபண்டாக கருத முடியாது.

உதாரணமாக, நீங்கள் முதலீடாக வைத்திருக்கும் பணத்தை அவசர தேவைக்கு எடுக்க முயற்சிக்கும்போது, அதற்கு வெயிட்டிங் பீரியட் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். சேமித்து வைத்த பணம் எதிர்காலத்திற்கான சேமிப்பு. அதில் பணத்தை சேர்த்துக்கொண்டே வர வேண்டும். ஆனால் எமர்ஜென்சி ஃபண்டை அவ்வப்போது நிரப்ப வேண்டியிருக்கும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்தால், திடீரென வரும் ஆபத்து காலங்களில் உங்கள் சேமிப்பை உடைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

திடீர் செலவுகள்

திடீரென எடுக்கும் பெரிய கொள்முதல்களை முடிந்தவரை தவிர்க்கவும். உங்கள் சக்திக்கு மீறிய அல்லது இஎம்ஐகளாக அனாவசியமான பொருட்களை வாங்குவதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக உங்கள் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தால், இதை கவனத்தில் கொள்வது நல்லது. திடீரென வரும் பெரிய செலவுகள் அடுத்த மாதம் முதல் உங்கள் மற்ற இஎம்ஐகள் உட்பட அனைத்து கட்டணங்களையும் பாதிக்கும், இதன் விளைவாக கிரெடிட் ஸ்கோரை கூட பாதிக்கலாம். இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினாலே உங்கள் பொருளாதார விஷயங்கள் ஏறக்குறைய சரியாகிவிடும்.

வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. வெளிநாட்டை சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!

காய்கறி விற்று வளர்த்த அம்மா; விடாமுயற்சியோடு படித்து ஐபிஎஸ் ஆன மகன்!

Read Entire Article