அதிமுகவில் ஈகோ கிடையாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

1 day ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: அதிமுகவில் ஈகோ கிடையாது, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக யார் பெரியவர்? யார் சிறியவர்? என்ற ஈகோ இல்லாத கட்சி. அதிமுக அண்ணாவைத் தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வளர்ந்த பிள்ளைகள். அதிமுகவில் ஈகோ என்பதே கிடையாது.

ஈகோ இல்லாமல் கொடி பிடிக்கும் தொண்டன் கூட பதவிக்கு வரலாம், என்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கான பதிலை அளித்துவிட்டார். அவரைப் பற்றி துருவி துருவி கேள்வி கேட்டாலும் அவர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர். ஆகையால் கருத்து சொல்ல முடியாது. அதிமுகவைப் பற்றி என்னதான் கேள்வி கேட்டாலும், அதிமுக உடைக்க முடியாத மாபெரும் இயக்கம், எஃகு போன்றது, என்ன சதி, சூழ்ச்சி செய்தாலும் தொண்டர்களே அதனை முறியடித்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவில் ஈகோ கிடையாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article