ARTICLE AD BOX
KKR vs RCB: கொல்கத்தாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுமா? விதிகள் என்ன?
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மோதவுள்ள நிலையில், கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால், ஐபிஎல் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதையும், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கான விதிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் இன்று மாலை தொடங்கவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் கேகேஆர் அணிக்காக ஆடிய பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 13 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 158 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியை ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.
2008ஆம் ஆண்டுக்கு பின் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதனால் 18 ஆண்டுகளுக்கு முன் அடைந்த மோசமான தோல்விக்கு, ஆர்சிபி அணி பதிலடி கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனாக இருந்தாலும், இம்முறை கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரே ரீடெய்ன் செய்யப்படவில்லை.
அஜிங்கியா ரஹானே தலைமையில் கேகேஆர் அணி களமிறங்க உள்ளதால், அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனான ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்குகிறது. இம்முறை இந்திய வீரர்களை கொண்டு ஆர்சிபி அணி கட்டமைக்கப்பட்டுள்ளதால், கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் போட்டி நடக்குமா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் நேற்று இரவு கூட கொல்கத்தாவில் கனமழை பெய்து, மைதானம் முழுக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிகளின்படி இரவு 10.56 மணி வரை நடுவர்கள் காத்திருக்கலாம். அதாவது கடைசி வாய்ப்பாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தக் கூட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் 10.56 மணி வரை மழை நிற்கவில்லை என்றால், ஆட்டம் ரத்து செய்யப்படும். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறப்பான கால்வாய் வசதிகள் இருப்பதால், மழை பெய்தாலும் மைதானத்தில் தண்ணீர் நிற்காது என்பது ரசிகர்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது.
- விராட் கோலியை நம்பி இல்ல.. டிகே செய்த வரலாற்று சம்பவம்.. ஆர்சிபி கோப்பையை வெல்லப்போவது உறுதி!
- அம்பாதி ராயுடு வேலையை செய்ய வந்தவர்.. சிஎஸ்கே தலையெழுத்து அவர் கையில்.. ருதுராஜ் எடுத்த ரிஸ்க்!
- ஐபிஎல் 2025.. கேகேஆர் - ஆர்சிபி மோதல்.. எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?
- CSK vs MI: பிளாக்கில் டிக்கெட் வாங்கினால் கண்டிப்பாக பணம் போய்டும்! ஐயோ இவ்வளவு பிரச்னை இருக்கா!
- எதே அர்ஜுன் டெண்டுல்கரா.. அந்த தப்பை பண்ணாதீங்க சூர்யகுமார்.. பும்ராவுக்கு மாற்றாக விளையாடுவது யார்?
- ஆர்சிபிக்கு நல்ல நேரம் இது.. 1993ல் பிறந்த ரஜத் பட்டிதார் ஜாதகத்தை பாருங்க.. ஜோதிடர் லோபோ கணிப்பு!
- பதிரானாவுக்கு அந்த பிரச்சனை இருக்கு.. சமாளிக்க ரச்சின் கட்டாயம் தேவை.. சிஎஸ்கேவின் வீக்னஸ் அது!
- வங்கக் கடலில் மாற்றம்? இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்.. 25ம் தேதி வரை மழை இருக்கு, டோன்ட் ஒர்ரி
- தூத்துக்குடியை புரட்டிப்போட்ட கனமழை.. மூன்றரை மணி நேரத்தில் 7 செமீ மழை பதிவு.. சாலைகளில் வெள்ளம்
- தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு சான்ஸ்! அனலுக்கு நடுவே ஜில் அப்டேட் தந்த வானிலை மையம்
- ஜெய்ஸ்வாலை ஒதுக்கிய சஞ்சு சாம்சன்.. ரியான் பராக்-க்காக நடந்த லாபி.. காரணமே அந்த ஆதரவுதான்!
- உல்லாச வாழ்க்கை.. புறநகரில் இப்படியும் ஒரு பெண்ணா? ஆடிப்போன சென்னை பல்லாவரம் போலீஸ்.. ஹைலைட் இதுதான்