Earthquake: வங்கக் கடலில் ரிக்டர் 5.1 அளவில் திடீர் நிலநடுக்கம்... கொல்கத்தாவில் அதிர்வு!

4 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று காலை 6 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) எக்ஸ் தளத்தில், ``வங்காள விரிகுடாவில் 19.52°N அட்சரேகை மற்றும் 88.55°E தீர்க்கரேகையில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 91 கிலோமீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது" என்று அதிகாரபூர்வமாகப் பதிவிட்டிருக்கிறது.

EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1

— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025

இந்தத் திடீர் நிலநடுக்கம் கொல்கத்தாவில் வசிப்பவர்களிடத்தில் சிறிது அச்சத்தை ஏற்படுத்தினாலும், இதுவரையில் பொருட்சேதமோ, உயிர்ச் சேதமோ ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல, இரண்டு நாள்களுக்கு (ஞாயிறு) முன்புதான் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில், காலை 8 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini: மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்... அமைச்சரிடம் வாழ்த்திய ரஜினி!
Read Entire Article