ARTICLE AD BOX
தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.