ஹேப்பி நியூஸ் மக்களே ! விரைவில் புதிய ரேஷன் கார்டு... அமைச்சர் அதிரடி அறிவிப்பு

19 hours ago
ARTICLE AD BOX
<p style="text-align: justify;">புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவதற்கு 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்த கார்டுகளும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.</p> <h2 style="text-align: justify;">3,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் புதிதாகத் திறப்பு</h2> <p style="text-align: justify;">திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் 3,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு இந்த பதில் கொடுக்கப்பட்டுள்ளது. பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் ரேஷன் கடைகள் இல்லாததால் 2 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக அவர்தெரிவித்தார்.</p> <p style="text-align: justify;">கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கீழ் பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் ரேஷன் கடைகள் இல்லாத காரணத்தால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் தமிழகம் முழுவதும் துணை கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.</p> <p style="text-align: justify;">இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 3000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலக்கப்படும் என தெரிவித்தார்.</p> <p style="text-align: justify;">ரேஷன் கடை தொடர்பான மற்றொரு அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 34,902 ரேஷன் கடைகளில் 6,218 ரேஷன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் முன்னதாக தெரிவித்திருந்தார்.</p> <h2 style="text-align: justify;"><strong>புதிய ரேஷன் கார்டுகள் குறித்து பேசுகையில்,</strong></h2> <p style="text-align: justify;">திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 18,000க்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மொத்தமாக 2.25 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும், 51,327 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவதற்கு 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்த கார்டுகளும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்.</p>
Read Entire Article