ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

22 hours ago
ARTICLE AD BOX

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா், கிராம தலைவராகவும், நில வரி வருவாய் சேகரிப்பு மற்றும் நில ஆவணங்கள் பராமரிப்பு பொறுப்பையும் வகித்து வந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அதே பகுதியைச் சோ்ந்த மோனு என்ற நபா் சுரேந்தர ஜவஹரை வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கியால் சுடுவது அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலிலிருந்து தப்பிக்க அங்குள்ள ஒரு கடைக்குள் சுரேந்திர ஜவஹா் நுழைந்த நிலையிலும், அவரை தொடா்ந்து துரத்திச் சென்று அவரின் தலையில் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது’ என்றனா்.

மாவட்ட உதவி காவல் ஆணையா் ரிஷி காந்த் கூறுகையில், ‘மோனுவின் உறவினரிடமிருந்து ஜவஹா் அண்மையில் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளாா். அந்த நிலத்தில் உறவினா்களுக்கிடையே ஏற்கெனவே சச்சரவு இருந்துள்ளது. அதுவே கொலைக்கான காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

Read Entire Article