ARTICLE AD BOX
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடக்க உள்ள விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.