ARTICLE AD BOX
ரூ.388 கோடி மோசடி! விதிமுறைகளை மீறிய வழக்கிலிருந்து அதானியை விடுவித்தது நீதிமன்றம்!
மும்பை: வர்த்தக விதிமுறைகளை மீறி அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக அதானி மீதும், ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏறத்தாழ 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் மார்க்கெட் விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடியை ஈட்டியதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து 2012ம் ஆண்டு தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமான SFIO அதானி மீதும், நிறுவனத்தின் இயக்குநரான ராஜேஷ் அதானி மீதும் வழக்கு பதிவு செய்திருந்தது. குற்றச்சதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு 2014ம் ஆண்டு இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது. ஆனால் வழக்கு இத்துடன் நின்றுவிடவில்லை. செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சென்றது. 2019ல் தீர்ப்பளித்த செஷன்ஸ் நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என்று கூறி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்திருந்தது.
ஆனால் அதானியும், ராஜேஷ் அதானியும் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி R.N. லத்தா தற்போது உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டதாவோ, ஏமாற்றியதாகோ அதானி நிறுவனததின் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவு பற்றிய முழு விவரமும் பின்னர் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைகள், உத்தரவுகள், இடைக்கால உத்தரவு, நீதிபதியின் அறிவுறுத்தல், அரசு தரப்பு வாதம், அதானி தரப்பு வாதம் என அனைத்தும் பல கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவை அனைத்தும் சந்தை ஒழுங்குமுறைகள் மீறல் மற்றும் நிறுவன நிதி மோசடி தொடர்பாக நடந்த முக்கியமான வழக்குகளில் ஒன்றாக இதை மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்
- Thengai Poo: "தேங்காய் பூ தேங்காய் பூவு"னு கூவி கூவி விற்பாங்களே! அந்த பூ உடல் எடையை குறைக்குமாமே!
- பழைய ஓய்வூதிய திட்டம்.. கைவிரித்த தங்கம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
- குருப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 3 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
- பங்கு சந்தையில் பணம் போட்டவர்களும், தங்கத்தில் பணத்தை போட்டவர்களும்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்
- புக் செய்த சீட்டை ஆக்கிரமித்த பயணிகள்! பெங்களூர் ஐடி ஊழியர் செய்த தரமான செயல்.. ரயில்வேக்கு தேவைதான்
- அசத்துதே அரசு கேபிள்..தூக்கி வீசப்படும் தனியார் செட்டாப் பாக்ஸ்கள்! அடடே வருதே IPTV.. செம அறிவிப்பு
- பிந்துகோஷ் கடைசி நொடிகள்.. பங்களா, 10 நாய், கார்.. அப்படி வாழ்ந்தாங்களே பிந்து கோஷ்.. பெஸ்ட் டான்சர்
- உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?
- யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்க.. இது ஒரு பெரிய மனுஷன் செய்ற காரியமா .. சச்சின் செய்வதை பாருங்க