ARTICLE AD BOX
சுல்தான்பூர்: ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மீது உத்தரப்பிரதேசத்தின் கோட்வாலி தேஹாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஹனுமன்கஞ்சை சேர்ந்த பாஜ நிர்வாகி மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
The post ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.