மீஞ்சூர் பேரூரில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றம்

2 hours ago
ARTICLE AD BOX

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் உள்ள வெங்கட ரெட்டி பாளையம் 2வது தெருவில் பழுதடைந்த ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து, மின்கம்பத்தை மாற்றுவதாக கூறிவிட்டு, சிமென்ட்டால் ஆன மின்கம்பத்தை எடுத்து அதன் அருகில் வைத்து விட்டனர். ஆனால், அந்த புதிய மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் நடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், மழைக்காலங்களில் இத்தெருவில் நடந்துசெல்லும் போது மின் கசிவு ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதனையடுத்து, மீஞ்சூர் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் உதவியோடு பழுதான இரும்பு கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதனால், மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினகரன் நாளிதழ் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post மீஞ்சூர் பேரூரில் பழுதடைந்த மின் கம்பம் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article