ARTICLE AD BOX
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆடு விலை உயர்வு.. இவ்வளவு ரூபாயா..? திணறும் மக்கள்!!
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 26ம் தேதியான நாளை வரவிருக்கிறது. இந்த மகாசிவராத்திரியில் ஆடு, சேவல் போன்ற உயிரினங்களை பலியிட்டு கடவுளை வணங்குவது வழக்கம். அதனால், இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா.. வெளியான நியூ அப்டேட்!!
அதாவது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில், 7000 ரூபாயாக இருந்த 10 கிலோ எடை கொண்ட ஆடு தற்போது 13,000 ரூபாய்க்கும், 20 கிலோ எடை கொண்ட ஆண்டு 23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிலோ சேவல் 400 முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆடு, சேவல் வாங்கப்போகும் மக்கள் விலையை கேட்டு அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.
The post மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆடு விலை உயர்வு.. இவ்வளவு ரூபாயா..? திணறும் மக்கள்!! appeared first on EnewZ - Tamil.