மகா கும்பமேளாவால் சிலிர்த்த மோடி: இதுதான் புதிய இந்தியாவா..? ராகுல் காந்தி ஆவேசம்..!

14 hours ago
ARTICLE AD BOX

மக்களவையில் மகா கும்பமேளா குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, ”பிரதமரின் பேச்சை நான் ஆதரிக்க விரும்புகிறேன். ஆனால், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தவில்லை. இது மட்டுமல்லாமல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது” என குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

”நாடாளுமன்ற வளாகத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி வேலைவாய்ப்பு பற்றிப் பேசியிருக்க வேண்டும். பிரதமர் மோடி சொன்னதை நான் ஆதரிக்க விரும்பினேன். கும்பமேளா நமது பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு எல்லாம் சரிதான். ஆனால், அங்கு இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தவில்லை. மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள். பிரதமர் அதைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பில், எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. இதுதான் புதிய இந்தியாவா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல் காந்தி.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா கூறுகையில், ‘பிரதமர் மகா கும்பமேளா குறித்து நேர்மறையாகப் பேசினார். எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் எதிர்க்கட்சிகளும் இதைப் பற்றி உணர்வுகளைக் கொண்டுள்ளன. நாம் நமது கருத்துக்களை முன்வைத்தால் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது. எதிர்க்கட்சியினருக்கும் இரண்டு நிமிடங்கள் பேச அனுமதி அளித்திருக்க வேண்டும்” என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி தனது உரையை முடித்தவுடன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அருகில் வந்து கூச்சலிடத் தொடங்கினர். கேள்விகள் கேட்கக் கோரினர். அதன் பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், விதி 372, பிரதமரோ அல்லது எந்த அமைச்சரோ எந்த கேள்வியையும் கேட்காமல் அவையில் அறிக்கை வெளியிடலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. அந்த நேரத்தில் சபையில் எந்த கேள்வியும் கேட்க முடியாது” எனக் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு, மகா கும்பமேளாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்த நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மகா கும்பமேளாவை வெற்றிகரமாக மாற்றுவதில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கூட்டுப் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் மோடி, அரசு, சமூகம், அதில் ஈடுபட்டுள்ள அனைத்து அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் முயற்சிகளையும் பாராட்டினார். நாடு முழுவதிலுமிருந்து வந்த பக்தர்களுக்கு, குறிப்பாக பிரயாக்ராஜ் குடிமக்களுக்கு, அவர்களின் விலைமதிப்பற்ற ஆதரவு மற்றும் பங்கேற்புக்காக பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Read Entire Article