ARTICLE AD BOX
Published : 20 Mar 2025 12:36 AM
Last Updated : 20 Mar 2025 12:36 AM
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கட்சி கொடி கம்பங்களை அகற்ற துரைமுருகன் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றும்படி கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மதரீதியிலான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்கு அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜன.27-ம் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் கடந்த மார்ச் 6-ம் தேதி தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தம் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்களில் வைத்துள்ள திமுக கொடிக்கம்பங்களை மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கொடிக்கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு: டிஜிபி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்
- தெரு நாய் கடித்து உயிரிழக்கும் ஆடு, மாடு, கோழிகளுக்கு இழப்பீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்
- மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா கால்பந்து அணி: சுனில் சேத்ரி அசத்தல்