பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எஃப்சி

6 hours ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 01:11 AM
Last Updated : 25 Feb 2025 01:11 AM

பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எஃப்சி

<?php // } ?>

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (25-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீரா கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி, 10 வெற்றி, 4 டிரா, 7 தோல்விகளுடன் 34 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன 24 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சிக்கும் (32 புள்ளிகள்), சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே 8 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். மாறாக சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றால் அந்த அணி மேற்கொண்டு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகளும் சென்னையின் எஃப்சி அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இது நிகழ்ந்தால் சென்னையின எஃப்சி அடுத்த சுற்றில் கால்பதிக்க வாய்ப்பு உருவாகக்கூடும்.

ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெங்களூரு எஃப்சி 9 ஆட்டத்திலும், சென்னையின் எஃப்சி 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article