ARTICLE AD BOX
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (53 வயது). இவர் நேற்று காலை நேரத்தில் வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் தன்னுடைய காரை ஆன் செய்தவாறு பிளஸ்-2 படிக்கும் தனது 17 வயது மகனுடன் சேர்ந்து காரை சுத்தம் செய்யும் பணியில் அவரது தந்தை ஈடுபட்டு உள்ளார். அப்போது மாணவன் இயக்கிய கார் எதிர்பாராத விதமாக ஓடிச்சென்று கோலம் போட்டுக்கொண்டிருந்த சரஸ்வதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரஸ்வதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் விபத்தில் உயிரிழந்த சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனையும், அவரது தந்தையையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் மீது மாணவன் இயக்கிய கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.