நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

20 hours ago
ARTICLE AD BOX

சென்னை : நாடாளுமன்றத்தில் தென் மாநில மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு கூட்டு செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த ஒற்றுமையின்மூலம், இந்தியாவின் ஒன்றியத்துவத்தை ஏந்திப் பிடிப்பதற்கான நமது கூட்டு முயற்சி பிரதிபலித்துள்ளது. நியாயமான மறுசீரமைப்பு என்பதில் நாம் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்பதையும் இது பிரதிபலிக்கிறது.

மேற்கண்ட இந்த இயக்கமானது, தொகுதிகள் மறுவரையறைக்கு எதிரானதல்ல. நியாயமான முறையில் அந்த செயல்பாடு அமைய வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை திறம்படச் செயல்படுத்தி நமது தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படாதவாறு மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் - நமது குரலை, நமது உரிமைகளை, நமது எதிர்காலத்தை ஒடுக்குவதற்கான தாக்குதலாகும். அப்படியிருக்கையில், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் நமக்கு இருக்கின்ற இப்போதைய பங்கினை எந்தச் சூழலிலும் குறைத்திட அனுமதிக்கமாட்டோம். போராடுவோம். வெல்வோம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article