துபாய் சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

3 days ago
ARTICLE AD BOX

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 14-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் மிரா ஆன்ட்ரீவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆன்ட்ரீவா அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் 17 வயதான மிரா ஆன்ட்ரீவா துபாய் ஓபனில் அரைஇறுதியை எட்டிய இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.


Read Entire Article