ARTICLE AD BOX
சென்னை: திரைத்துறையின் 32 துறைகளை கையாண்டு, கதையின் நாயகியாக எஸ்.லாவண்யா நடித்துள்ள படம், ‘பேய் கொட்டு’. முக்கிய வேடங்களில் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், செல்வம் ஆகியோருடன் இணைந்து ஒரு நாய், ஒரு பேய் நடித்துள்ளன.
32 தொழில்நுட்பங்களை சுயமாக கற்று கையாண்டுள்ள எஸ்.லாவண்யா, காமெடி ஹாரர் திரில்லரான இப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படம், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பஞ்சாப்பில் எஸ்.லாவண்யா எம்.ஏ இந்துஸ்தானி இசையை படித்துள்ளார்.