ARTICLE AD BOX
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக 106 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
திருப்பதி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில், மற்றொன்று திருப்பதி லட்டு பிரசாதமாகும். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாக அன்னதானம் மற்றும் தங்கும் விடுதிகளையும் இலவசமாக வழங்கி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பதை பார்ப்போம். கடந்த ஜனவரி மாதம் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்னர். உண்டியல் காணிக்கையாக 106 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்க பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பதை பார்ப்போம். கடந்த ஜனவரி மாதம் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்னர். உண்டியல் காணிக்கையாக 106 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்க பெற்றுள்ளது.