திருச்சியில் போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை…!

7 hours ago
ARTICLE AD BOX

திருச்சி, பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். ஒரு வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தில் ராஜா கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலையில் தூக்கமாட்டி ராஜா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை…! appeared first on Rockfort Times.

Read Entire Article