திடீரென டிரைவருக்கு வலிப்பு சரக்கு லாரி மோதி மின்கம்பம் சேதம்: டிரைவர் உயிர் தப்பினார்

1 day ago
ARTICLE AD BOX

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, மின்கம்பம் மீது சரக்கு லாரி மோதியதில் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதில், லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை செங்குன்றம், அத்திப்பேடு பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார் (40), லாரி டிரைவர். இவர், நேற்று அதிகாலை சென்னை அருகே சோழவரத்தில் இருந்து இரும்பு சம்பந்தப்பட்ட பேரல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் தனியார் கம்பெனிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஊத்துக்கோட்டை அருகே, திருவள்ளூர் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் உதயகுமாருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியது. இதில், மின் கம்பம் உடைந்து அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த, ஊத்துக்கோட்டை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த டிரைவரை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திடீரென டிரைவருக்கு வலிப்பு சரக்கு லாரி மோதி மின்கம்பம் சேதம்: டிரைவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Read Entire Article