ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காததற்கு சூர்யாதான் காரணமா? அவரே சொன்ன பதில்!

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர தம்பதிகளில் சூர்யா - ஜோதிகா தம்பதியும் ஒன்று. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும் மற்றும் தியா என்ற மகளும் இருக்கிறார்கள். 

ஜோதிகாவும் சினிமாவும் 

ஜோதிகா வாலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. இயக்குநர் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுபார் படத்தில் நடித்தார். அப்படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்நாளில் காதலாக மாறியது. பின்னர் பேரழகன், சில்லுனு ஒரு காதல், காக்க காக்க என சேர்ந்து பல படங்களில் நடித்தனர். 

இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின் சில வருடங்களுக்கு சினிமாவில் தலைகாட்டவில்லை. இதையடுத்து ஜோதிகா 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிவிற்கு எண்டிரி கொடுத்தார். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. 

மேலும் படிங்க: விஜய்யால் மமிதாவுக்கு அடிச்ச ஜாக்பாட்! 4 டாப் ஹீரோக்களின் படங்களில் இவர்தான் ஹீரோயின்..

அதன்பின் காற்றின் மொழி, ராட்சசி என பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். தற்பொது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான நடிகை ஜோதிகா தொடர்ச்சியாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க வராததற்கு சூர்யா தான் காரணம் என பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், பழைய நேர்கானல் ஒன்றில் இது தொடபாக பேசி இருக்கிறார். 

அது நானாக எடுத்த முடிவு 

அவர் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதை சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. எனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்பியதால், நான் அந்த முடிவை எடுத்தேன். 

இந்த முடிவிற்கு எனது கணவர் சூர்யாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ காரணம் அல்ல. அது நானாக விரும்பி எடுத்த முடிவு. இது குறித்து ஊடகங்களுக்கு தெரிந்தும், நான் மீண்டும் சினிமாவிற்கு வருவது குறித்து சூர்யாவிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

பல எதிர்ப்புகளை சூர்யா சந்தித்தார்

எனது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம். யாராவது ஒருவர் சூர்யாவுக்கு, ஜோ-வின் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏன் அவரை நீங்கள் நடிக்க விடக்கூடாது என மேசேஜ் செய்வார்கள். அதை உடனே சூர்யா எனக்கு அனுப்புவார். சூர்யா அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்தார் என கூறினார்.  

மேலும் படிங்க: தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாத பாவனா! அவரே சொன்ன காரணம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article