ARTICLE AD BOX
சென்னையில் இரவில் நடந்த படுபயங்கர சம்பவம்.. 2 ரவுடிகள் துள்ளத் துடிக்க வெட்டிக்கொலை!
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் 2 ரவுடிகள் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் ஆகியோர் மது போதையில் படுத்து இருந்தபோது, ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் (25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து தூங்கியுள்ளனர்.

இரவு 10 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மது போதையில் படுத்திருந்த அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளது. மது போதையில் இருந்ததால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அலறி துடித்துள்ளனர்.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் உடல் முழுவதும் வெட்டு காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலியை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பழிக்கு பழி வாங்க சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு இருந்த நிலையில் இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அருண் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனை கொலை செய்யத் திட்டமிட்டு நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது அருண் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பரான படப்பை சுரேஷை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேச்ஜ் உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து கோட்டூர்புரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நேற்று இரவு நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் சென்னை நகர் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 24 ஆண்டுக்குப் பின் சிக்கிய 'தாதா' சேரா-போலீஸ் என்கவுண்ட்டருக்கு பயந்து ஓடிய மாஜி போலீசின் கதை என்ன?
- தங்கத்தை ’அங்கே’ வைத்து கடத்தினேன்..எல்லாம் யூடியூப் பார்த்து தான்! ஆபிசர்களை அலற விட்ட ரன்யா ராவ்.!
- கோவை பயங்கரம்:கள்ளக் காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை- கடத்தல் நாடகமாடிய தாய் கைது!
- தங்க கடத்தல் ராணி நடிகை ரன்யா ராவ் ஷாக் புகார்-விசாரணையில் "வேற மாதிரி" தாக்குதல்- பட்டினி சித்ரவதை!
- ஆவி பிடிச்சிருக்கு! மந்திரவாதி பேச்சை கேட்டு 6 மாத குழந்தையை தீயில் தொங்கவிட்ட பெற்றோரால் விபரீதம்!
- மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி! கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் சோகம்
- சூளகிரி லோகுவுக்கு.. பெங்களூரில் பக்கா ஸ்கெட்ச்! கணவனுக்காக காதலனை கொன்ற இளம்பெண் கைது!
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
- ஆடு வளர்ப்பது அழகு பார்க்க கிடையாது.. பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப்!
- குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கி வைங்க.. வேண்டாத வேலை பார்த்த ட்ரம்ப்! இனி தொடர்ந்து உச்சம் தானாம்!
- இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்