ARTICLE AD BOX
'எண்டே ஆண்கள்' என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்த நெல்லையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை விமலாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை, பிற இந்திய மொதிருநெல்வேலிழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கு, 1955ஆம் ஆண்டு முதல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய "என்ட ஆண்கள்" என்ற நூலை " எனது ஆண்கள்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியை விமலா, சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வாகியுள்ளார். "எனது ஆண்கள்" நூல் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழி பெயர்த்துள்ளார்.