ARTICLE AD BOX
கராச்சி: சாம்பியன்ஸ் கோப்பைக்கான முதல் ஒரு நாள் போட்டி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று கோலாகலத்துடன் துவங்கியது. டாஸ் வென்ற பாக். பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய நியூசிலாந்தின் வில் யங் 107 ரன்னும், டெவோன் கான்வே 10 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். பின் வந்தோரில் டாம் லாதம் அற்புதமாக ஆடி ஆட்டமிழக்காமல் 118 ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் நியூசி. 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன் குவித்தது. இதையடுத்து 321 ரன் வெற்றி இலக்குடன் பாக். களமிறங்கியது. 30 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.
The post சாம்பியன்ஸ் கோப்பை நியூசி 320 ரன் குவிப்பு appeared first on Dinakaran.