ARTICLE AD BOX
சென்னை: முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.நேற்றுகாலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்து விற்கப்பட்டது. இதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.1,800ல் இருந்து ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.1,500ல் இருந்து ரூ.600க்கும், முல்லை ரூ.1,200ல் இருந்து ரூ.500க்கும், ஜாதி மல்லி ரூ.1,200ல் இருந்து ரூ.450க்கும், கனகாம்பரம் ரூ.600ல் இருந்து ரூ.300க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.240ல் இருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளது. வியாபாரமும் மந்தமாகி அனைத்து பூக்களும் தேக்கம் அடைந்துள்ளன என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு appeared first on Dinakaran.