கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ் – தமிழ்நாடு பொது சுகாரத்துறை

2 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ் – தமிழ்நாடு பொது சுகாரத்துறை

அதில், ” பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுகோள் பகல் 12:00 மணியிலிருந்து மூன்று வரையும் வெளியே செல்ல வேண்டாம் . தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாலை ,அல்லது மாலையில் மட்டும் பொதுமக்கள் வெளியே செல்லும் வேலைகளை வைத்துக்கொள்ளவும். பொதுமக்கள் தலையில் தொப்பி, தொண்டு ,குடைகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்.  காலணி அணியாமல் வெளியில் வெயிலில் செல்ல வேண்டாம் . பொதுமக்கள் வெளியில் செல்லும்போது குடிநீர் பாட்டில் உடன் செல்ல வேண்டும்.  அதிக எடை இல்லாத தளர்வான உடையை அணிவது நல்லது.

ஓ ஆர் எஸ் கரைசல் எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு ,எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை ஒரு சிட்டிகை உப்புடன் கலந்து பருகுவதை மேற்கொள்ளுங்கள். தர்பூசணி ,ஆரஞ்சு ,வெள்ளரி போன்ற நீசத்துள்ள பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க  அனைவரும் அடிக்கடி தண்ணீரை பருக வேண்டும். குழந்தைகள் ,பெரியவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . சூரிய வெளிச்சத்தில் நேரடியாக செல்ல வேண்டாம். நண்பகலில் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை செய்ய வேண்டாம். வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளவும். மயக்கம் ,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ , செல்லப்பிராணிகளையோ விட்டுச்செல்ல வேண்டாம் என அறிவுருத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு..!

Read Entire Article