அதிர்ச்சி..!! ஒரே வீட்டில் தாய், மகன், மகள் சடலமாக மீட்பு..!! கணவர் மாயம்..!! சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

2 hours ago
ARTICLE AD BOX

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டில் தாய், மகன், மகள் என 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பதி நகரில் வசித்து வந்தவர் தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ். இந்நிலையில், இவரது வீட்டில் அவரது மனைவி மோகனப்பிரியா (33), மகன் பிரினிராஜ் (13) மற்றும் மகள் பிரினித்தி (6) ஆகியோர் சடலமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, மோகனப்பிரியாவின் கணவர் பிரேம்ராஜ், கடன் தொல்லையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக கிடந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூவரும் கொலை செய்யப்பட்டார்களா..? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா..? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே, இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கணவர் தலைமறைவான நிலையில், மனைவி மோகனப்பிரியா, தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : மீண்டும் உறுதியாகிறதா அதிமுக – பாஜக கூட்டணி..!! எடப்பாடி சொன்ன சூசக பதில்..!! அண்ணாமலை சொன்னது நடக்கப் போகுதா..? அப்போ திமுக நிலைமை..?

The post அதிர்ச்சி..!! ஒரே வீட்டில் தாய், மகன், மகள் சடலமாக மீட்பு..!! கணவர் மாயம்..!! சிக்கிய பரபரப்பு கடிதம்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article