கோடை சீசன் நெருங்குகிறது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடி நடவு பணி தீவிரம்

6 hours ago
ARTICLE AD BOX

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனுசரிக்கப்படும் முதல் சீசனின் போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இக்கண்காட்சியை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வர். கடந்த ஆண்டு நடந்த மலர்கள் கட்சியையும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவங்கி நடத்து வருகிறது. 35,000 தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்வதற்காக அலங்கார செடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலங்கார செடிகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள் மற்றும் சரிவுகளில் நடவு செய்யப்பட உள்ளன.

The post கோடை சீசன் நெருங்குகிறது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடி நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article