கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி

4 days ago
ARTICLE AD BOX

Published : 20 Feb 2025 07:40 AM
Last Updated : 20 Feb 2025 07:40 AM

கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி

<?php // } ?>

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி டென் மார்க்கின் ஹோல்ம்கிரென், எல்மர் மோலர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 7-6 (7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதி சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொள்கிறது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் மைக்கேல் கீர்ட்ஸ், இங்கிலாந்தின் பில்லி ஹாரிஸ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்திருந்தது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article