ARTICLE AD BOX
Published : 20 Feb 2025 07:40 AM
Last Updated : 20 Feb 2025 07:40 AM
கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி டென் மார்க்கின் ஹோல்ம்கிரென், எல்மர் மோலர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 7-6 (7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதி சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொள்கிறது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் மைக்கேல் கீர்ட்ஸ், இங்கிலாந்தின் பில்லி ஹாரிஸ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்திருந்தது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை