ARTICLE AD BOX
காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. நீதிமன்ற உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீதான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு மார்ச் 10ம்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் 13 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு காவல் நீடிப்பு appeared first on Dinakaran.