ஒருநாள் கிரிக்கெட்: 2-வது போட்டியிலேயே 5 விக்கெட்டுகள்.. வருண் சக்ரவர்த்தி அபார சாதனை

10 hours ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@BCCI

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் மொத்தமான சரணடைந்தது. அந்த அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வருண் சக்ரவர்த்தி தனது 2 போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விரைவில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற அபார சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்டூவர்ட் பின்னி, அவரது 3-வது போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது அவரை முந்தி வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்துள்ளார்.�

Read Entire Article