ARTICLE AD BOX
எருமை மாட்டுக்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம்.. மாப்பிளையுடன் மாட்டிக்கொண்ட மணப்பெண்!!
முன்பெல்லாம் உயிருக்கு உயிராக உண்மையாக காதலித்து பின் திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்க்கையை துவங்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பெண் எருமை மாட்டுக்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
அதாவது, உத்தரபிரதேசம் ஹாசன்பூரில் உள்ள ஒரு பெண் முதலமைச்சரின் திருமண திட்டத்தின் கீழ் கிடைக்கும் 35 ஆயிரம் ரூபாயை வைத்து எருமை மாடு வாங்கலாம் என்று திட்டமிட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் கிடைக்கும் பரிசு பொருட்களை சரி சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று மணமகனுடன் ஒப்பந்தமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை 6 மாதம் பிரிந்து வாழும் இந்தப் பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
The post எருமை மாட்டுக்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம்.. மாப்பிளையுடன் மாட்டிக்கொண்ட மணப்பெண்!! appeared first on EnewZ - Tamil.