ARTICLE AD BOX
பின்னணிப்பாடகி சரளா என்றால், மூத்த தலைமுறையினருக்கு நன்கு தெரியும். இளம் தலைமுறையினர் 'பேசும் தெய்வம்' படத்தில் அவர் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்ற பாடலை நிச்சயம் கேட்டிருப்பார்கள். அந்தளவுக்கு யாருடைய பிறந்த நாள் என்றாலும், இந்தப்பாடல் தான் எல்லா சமூகவலைத்தளங்களிலும் ஒலிக்கிறது. அந்தப்பாடலில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் சரளா அம்மாவுடையது.

சரளாம்மாவுக்கு சினிமா பாட்டு என்றால் உயிர். மற்றபடி, அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் அவருக்கு கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு கேட்டு தானாகப் பாடிக்கொண்டிருந்த சரளாம்மாவை அவருடைய அம்மா ஊக்குவிக்க, எம்.ஆர்.ராதா, தங்கவேலு போன்றவர்களின் நாடகங்களில் பாட ஆரம்பித்திருக்கிறார். ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கொண்டிருந்தவரின் குரலைக்கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜாவுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி சில பாடல்களை சினிமாவில் பாடியிருக்கிறார். ஆனால், சரளாம்மா மேடைக்கச்சேரிகளில் பாடிய பாடல்களை எண்ணவே முடியாது என்று அவள் விகடனுக்கு அளித்தப் பேட்டியொன்றில் அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.
நாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்! - பாடகி சரளாசில வருடத்திற்கு முன்னாள் பக்கவாதம் வந்ததையடுத்து, அவரால் பாட முடியாத நிலை. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலி என்று பல திரைத்துறை ஆளுமைகளால் பாராட்டப்பட்ட சரளாம்மா தற்போது எப்படியிருக்கிறார் என தெரிந்துகொள்வதற்காக, அவரைத் தொடர்புகொண்டோம். அவருடைய மகள்கள்தான் பேசினார்கள்.

''போன வருஷம் அம்மா தவறி கீழே விழுந்துட்டாங்க. அதனால, அம்மாவோட எலும்பு ஒண்ணு முறிஞ்சிடுச்சு. 8 புத்தூர்க்கட்டு போட்டோம். இப்போ நடக்கிறாங்கன்னாலும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் நடக்கிறாங்க. அம்மாவுக்கு இப்போ வயசும் 83 ஆகிடுச்சு. வயசோட பலவீனம் வேற... விகடன்ல இருந்து பேசுறீங்க அப்படிங்கிறதால, அம்மாவோட ரொம்ப வருஷத்து ஆதங்கம் ஒண்ணை சொல்லிடுறேன். '60 வருஷமா பாடிக்கிட்டிருக்கேன். ஆனா, அதை கெளரவிச்சு எனக்கு யாரும் எந்த விருதும் இதுவரைக்கும் கொடுக்கல. இன்னும் என் காலம் எவ்ளோ நாளோ'ன்னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்காங்க. எங்களுக்கும் இதுதொடர்பா யார்கிட்ட போய் பேசுறதுன்னு தெரியல. ஆனா, அம்மா தான் 'பாரம்பர்யமான பத்திரிகைகள்ல இருந்து யாராவது பேசினா என்னோட வருத்தத்தை சொல்லுங்க'ன்னு சொன்னாங்க'' என்கிறார்.
'கோடீஸ்வரி' கெளசல்யா கார்த்திகாவை ஞாபகமிருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks