ARTICLE AD BOX

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பதுமட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்படி, அவர் இயக்கிய முதல் படம் 'ப பாண்டி. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. 2-வதாக தனுஷ் இயக்கிய படம் ராயன்'. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் இன்று வெளியாகிறது. இதற்கு முன்பு இயக்கிய 2 படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இயக்குனராக தனுஷ் ஹாட்ரிக் வெற்றி பெறுவார். இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றநிலையில் படமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் இயக்கத்தில் நான்காவது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.