ARTICLE AD BOX
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அந்தமானுக்கு 162 பயணிகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால், அந்த விமானம் 162 பயணிகளுடன் மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணியளவில் அந்தமானுக்கு 162 பயணிகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அந்தமான் விமான வான்வெளியை விமானம் நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியது.
இதனால் அந்தமானில் இன்டிகோ ஏர்லனை்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தது. இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி விமானிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, சென்னையில் இன்று காலை அந்தமானுக்கு 162 பயணிகளுடன் கிளம்பி சென்ற இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.
விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, அனைவரும் விமானநிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் சிறிது நேரத்தில் ‘அந்தமானில் வானிலை சீரடைந்த பிறகு, இந்த விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டு செல்லும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை அந்தமான் செல்லவிருந்த 162 பயணிகளும், இனி எப்போது அந்தமான் புறப்பட்டு செல்வோமா என்று எண்ணியபடி சென்னை விமானநிலையத்தில் தவிப்புடன் காணப்பட்டனர்.
The post அந்தமானில் மோசமான வானிலையால்; 162 பயணிகளுடன் சென்னை திரும்பிய விமானம் appeared first on Dinakaran.