ARTICLE AD BOX
/tamil-ie/media/media_files/uploads/2023/03/TNPSC-Group-4.jpg)
அரசு வேலையில் சேர வேண்டும் என கனவு காண்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு குட்நியூஸை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/oROZua2n7MqqJwyk9fj5.jpg)
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/vxCyokAmwc1390uAcotX.jpg)
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/tnpsc-notification.jpg)
கடந்த ஆண்டு இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்ட கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி -IV தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலர் தேர்வில் 3 மாணவர்களும் வெற்றி பெற்று அரசுப் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Exam.jpeg)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள, தொகுதி தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/za1l1c314gqsJtB4b4DL.jpg)
இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 13.03.2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/QKKfv6T8CxaXEMdcfL97.jpg)
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெறவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/Z4muFHubF9SByX0CF9L9.png)
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.