IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!

3 hours ago
ARTICLE AD BOX
<p><strong>IND vs AUS Champions Trophy:</strong> சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று அரையிறுதி போட்டியில் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.&nbsp;</p> <p><strong>265 ரன்கள் டார்கெட்:</strong></p> <p>இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கும், ஷமியின் வேகத்திற்கும் இடையில் ஸ்மித், அலெக்ஸ் கேரியின் சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலியா 264 ரன்களை எட்டியது. இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டி என்ற கனவுடன் இந்தியா களமிறங்கியது. &nbsp;இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன்கில் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. ரோகித் சர்மா தந்த 2 கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலியா கோட்டை விட்டது.&nbsp;</p> <p><strong>விராட் கோலி பொறுப்பான பேட்டிங்:</strong></p> <p>சுப்மன்கில் 8 ரன்னில் அவுட்டாக, சிக்ஸர் மற்றும் பவுண்டரி என விளாசிய ரோகித் சர்மா 28 ரன்னில் கூப்பர் பந்தில் அவுட்டானார். 43 ரன்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர். விராட் கோலி நிதானமாக ஆட ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடினர்.&nbsp;</p> <p>சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 62 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு விராட் கோலிக்கு 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அக்ஷர் படேல் ஒத்துழைப்பு தந்தார்.&nbsp;</p> <p><strong>அக்ஷர் அபாரம்:</strong></p> <p>விராட் கோலி ஓரிரு ரன்களாக எடுக்க அக்ஷர் தொடக்கத்தில் நிதானமாக ஆட பந்துகளை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், அவர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.&nbsp;</p> <p>இதையடுத்து, விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. அரைசதத்தை கடந்த விராட் கோலி மேற்கொண்டு விக்கெட்டு விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிதானமாக ஆடினார். கே.எல்.ராகுல் அடித்து ஆடத் தொடங்கிய நிலையில், விராட் கோலியும் அடித்து ஆட முயற்சித்தார்.&nbsp;</p> <p><strong>திடீர் பரபரப்பு:</strong></p> <p>பந்துகளுக்கு ஏற்ப ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி அவுட்டானார். அவர் 98 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா - கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். பந்துக்கு ஏற்றவாறு ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், ஹர்திக் தனது அதிரடியை காட்டினார்.&nbsp;</p> <p>குறிப்பாக, ஆடம் ஜம்பாவின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p> <p><strong>இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்:</strong></p> <p>இருப்பினும் ஆட்டம் முழுவதுமாக இந்தியா வசம் வந்ததால் இந்தியாவின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தவிர்க்க முடியவில்லை. 12 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். கடைசியில் இந்திய அணி 48 .1 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p> <p><strong>14 ஆண்டுகள் சோகம்</strong></p> <p>இதன்மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும். 2011ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி நாக் அவுட் தொடர்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்ற 14 ஆண்டு சோகத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p>
Read Entire Article