ARTICLE AD BOX

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் 11 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.