ARTICLE AD BOX
Published : 20 Feb 2025 05:45 AM
Last Updated : 20 Feb 2025 05:45 AM
புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி மொத்தம் 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.498.80 கோடி ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த விவசாய மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் செய்தியாகும்.
விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் தேமுதிக சார்பாக சென்று பார்வையிட்டு தமிழக அரசிடம் நிவாரணத் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகையை வழங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தொகையை உடனடியாக வங்கிக் கணக்குக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி: வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
- கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி
- தாய்மொழி தினத்தை கொண்டாட வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
- அரசு மருத்துவர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற 400 பேர் பங்கேற்றதாக குற்றச்சாட்டு