தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்!

2 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று(பிப்., 24) அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.

இதையும் படிக்க | கால்களில் அடிக்கடி வலி, வீக்கம் ஏற்படுகிறதா? மருத்துவர் என்ன சொல்கிறார்?

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கமுள்ள தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரவலாகப் போற்றப்படுகிறார்.

பல சந்தர்ப்பங்களில் அவருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நல முயற்சிகளுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She is widely admired as a compassionate leader and outstanding administrator who devoted her life for Tamil Nadu’s development. It is my privilege that I had the opportunity to interact with her on innumerable occasions. She… pic.twitter.com/oPMiT42YPY

— Narendra Modi (@narendramodi) February 24, 2025
Read Entire Article