ARTICLE AD BOX
Published : 04 Mar 2025 04:26 PM
Last Updated : 04 Mar 2025 04:26 PM
“தொழில் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” - பிரதமர் மோடி

புதுடெல்லி: தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், சர்வதேச அளவில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஒழுங்குமுறை, முதலீடு, வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று இந்தியா நிலையான கொள்கைகளையும் சிறந்த வணிகச் சூழலையும் வழங்குகிறது. நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முன்னேற்றுவதற்கு பெரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களை (தொழில் நிறுவனங்களை) வலியுறுத்துகிறேன்.
இன்று உலகிற்கு ஒரு நம்பகமான கூட்டாளி தேவை. தொழில்துறை வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வாய்ப்புகளைத் தேட வேண்டும். இன்று இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி இயந்திரமாக மாறியுள்ளது. கடினமான காலங்களிலும் நாடு அதன் மீள்தன்மையை நிரூபித்துள்ளது.
குறைந்த விலையில், சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, MSME-களுக்கு புதிய கடன் வழங்கல் முறைகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் தற்போது 14 தொழில் பிரிவுகள் பயனடைந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 750க்கும் அதிகமான அலகுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு, ரூ. 13 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி, ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புகள் கிடைக்கும்போது தொழில்முனைவோர் புதிய பகுதிகளில் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.
வணிகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. மத்திய, மாநில நிலைகளில் 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்கள் அகற்றப்பட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கின்றன. முதலீட்டாளர்கள் முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்தும் மாநிலங்களை விரும்புகிறார்கள். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மத்திய பட்ஜெட் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி, பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. வெளிநாடுகளில் அதிக தேவையுடன் புதுமையான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும், இறுதியில் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும், உலக சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா: கொலை வழக்கில் உதவியாளர் கைது எதிரொலி
- தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு
- இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: உலக வன உயிரின தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
- பூலன்தேவியை போல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு உ.பி.யின் சம்பலில் அச்சுறுத்தலாக இருந்த குசுமா உயிரிழப்பு